Pages

Thursday, March 10, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே- திமுக கூட்டணி பேறம்!

திமுக கூட்டணியில் நடக்கும் இந்த நாடகத்தை பார்க்கும் பொழுது பாரதியின் "நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நெறிக்கெட்ட மாந்தரை பார்க்கும்போது"  வரிகளே எனக்கு நினைவுக்கு வருகிறது.


"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று  மடியும்  இந்த  அடிமையின்  மோகம் ?"

என்ற வரியை மாற்றி

"என்று தணியும் இந்த பதவியின் மோகம்?
என்று  விடியும்  இந்த தமிழனின்  வாழ்வு ?"

என்றல்லவா கேட்க தோன்றுகிறது. 

காங்கிரஸ் 60 தொகுதி வேண்டாம் 63 தொகுதிதான் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு இருந்ததால் கூட்டனியில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்ட திமுக இன்று 63 இடங்களை கொடுத்து "காங்கிரஸ் இதை பக்தி மனதுடன் ஏற்றுகொள்ளும், ஏனென்றால் 63 நாயன்மார்கள் இருந்தார்கள்" என்று அறிக்கை விடுகிறது. கடவுளே இல்லை என்று கூவும் கட்சிக்கு ஆண்மீகம் எதுக்கு என்று புரியவில்லை. இதை யாரவது கேட்டால் நான் வரலாற்றை கூறினேன், எனது கட்சியின் சித்தாந்தம் மாறவில்லை என்று கூறுவர். இதில் இன்னும் என்ன கொடுமைவென்றால் , பொதுக்கூட்டம் முடிந்ததும் "எங்களுக்கு தண்மானம் இருக்கிறது, காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரும் என்று நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை" என்றெல்லாம் அறிக்கை விட்ட கட்சி, பாவம் டெல்லி சென்றதும்,  அதன் தண்மானம் எங்கே போனது என்று சொல்ல மறந்துவிட்டது .

திமுக இப்படி இருக்க , நம்ம ஐயா ராமதாஸ், எங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை ஒருபோதும் விட்டு கொடுக்கமாட்டோம் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தவர் இன்று ஒரு தொகுதியை இழந்து நிற்கிறார். இதற்கு அவர் கூறும் விழக்கம் கூட்டணி தர்மம். இது திமுகவிற்கு முன்னமே தெரிந்து இருந்தால் ஒரு வேலை திமுக இன்னும் சில தொகுதிகளை பாமகவிடமிருந்து எடுத்துகொண்டிருக்கக்கூடும் மற்றும் அறிக்கைக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, நம்ப பெரியார் கட்சி தமாசு கி. வீரமணி அவர்கள் ஏதோ அவர்தான் உலக தமிழர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் மாதிரி "தமிழகம் மட்டும் இல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லாம் இந்த திமுக காங்கிரஸ் முறிவை மகிழ்ச்சியுடம் வரவேற்கிறார்கள்" என்ற  அறிக்கையை வெளியிட்டார்.  இப்பொழுது என்ன அறிக்கை விடலாம் என்று இன்னமும் அவருக்கு விளங்கவில்லை.

தனது குடும்பத்தின் உறுப்பினர்களின் மேல் தொங்கும் கத்தியையும் மற்றும் தனது மத்திய அமைச்சர்கள் செய்த(சித்த மருத்துவமனை வழங்களில் ஊழல்) போன்றவற்றிலிருந்து தப்பிக்க திமுகவிற்கு காங்கிரசின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது. ராமதாசுக்கோ  தனது மகன் செய்த மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் நடந்த ஊழலிருந்து தப்பிக்க காங்கிரசின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரசுக்கோ தமிழகத்தில் தனது கட்சியினர் டெபொசிட் இழக்காமலிருக்க ஏதாவது ஒரு கூட்டணியில் சவாரி செய்யவேண்டியிருக்கிறது.

இதை அறியாத பாமர கட்சி
தொண்டனின் நிலைமை இன்று அதோகதிதான். கட்சி கொள்கையும் தன்மானமும் தான் முக்கியம் என்று தம்பட்டம் அடித்த திமுக தொண்டன் இன்று தலையில் துண்டு போட்டுகொண்டு வீட்டில் முடங்கிக்கிடகிறான் அவனது தன்மானத்தை காக்க. தனது மகனின் ராஜ்யசபா சீட்டுக்காக தனது சாதினரை கைவிட்ட பாமகவை அவனது சாதிக்காரன் மிரச்சியோடு பாக்கிறான்.

இந்த நாடகத்தை பார்த்துகொண்டு இருக்கிற கட்சி தொண்டன் சோர்ந்துபோய்க்கிடக்கிறான். எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி, வெற்றி கூட்டணி என்று மனசாட்சியே இல்லாமல் அறிக்கைவிடும்போது, அவர்களுக்கு தெரிந்தேயிருக்கிறது இது ஒரு வடிவேலுவின்  அடுத்தப்பட நகைச்சுவை என்று.

No comments:

Post a Comment