Pages

Sunday, March 6, 2011

வடை போச்சே- திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவு

நான் சின்ன பையனா இருந்தப்ப நான் கேள்விபட்ட கதை- பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாங்கலாம். அத ஒரு காக்க ஒரு வடைய தூக்கிட்டு பறந்து மரத்துல உட்காந்திருச்சம். அத பாத்த நரி ஒரு தந்திரம் பண்ணுச்சாம். காக்கவ கா கா நு கத்த சொன்னுச்சாம். நரியோட தந்திரம் தெரிஞ்சுகிட்ட காக்கா வடைய கால்ல வச்சிக்கிட்டு கா கா நு கத்துச்சாம். நரி ஏமாந்துடுச்சாம்

நம்ம காங்கிரஸ் திமுக கூட்டணி முறிவு பற்றி படிச்சதும் எனக்கு இந்த கதை தான் ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு தெரிந்த வரையில் 80'ல்  இருந்த மாதிரி இப்பொழுது காங்கிரெஸ்க்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு வாக்காளர்கள்  தமிழ்நாட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை. அவர்களுக்கு என்று சொல்லி கொள்ளும் பெரிய அளவுக்கு தலைவர்களும் தமிழ்நாட்டில் இல்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டி இட்டதும் இல்லை. ஒரு முறை மூப்பனார் காங்கிரஸ்லிருந்து விலகி தனியாக கட்சி ஆரம்பித்து சைக்கிள் சின்னத்தில் போட்டிட்டார். அதற்கு பிறகு கூட்டணி என்ற குதிரையின் மீது ஏறியே தேர்தல் களம் கன்டது  எல்லா தேர்தலிலும். தனது உண்மையான வாக்காளர்களையும் இழந்தது.

இராகுலின் தமிழ்நாட்டு பயணம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குறிப்பாக இளஞர்கள் மத்தியில் புத்துணர்வு கொடுத்துள்ளது என்பது ஏற்பதற்கில்லை. 14 இலச்சம் இளைஞ்சர்களை புதிதாக சேர்த்ததாக சொல்லும் கட்சி, கூட்டணிக்காக அலைவதிலிருந்து அது எந்த அளவிற்கு உண்மை என்பதை புரிந்துகொள்ளலாம்.

திமுகவின் குடும்ப அரசியல், குடும்பங்களின் அணைத்து துறைகளின் ஆதிக்கம், 2G ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு போன்றவை திமுகவிற்கு எதிராக உள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிக கோபம் இருப்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னை, மீணவர்கள் மீதான தாக்குதல், CVC, CWG ஊழல் மற்றும் நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலை, விலைவாசி உயர்வு போன்றவை காங்கிரஸ்க்கு எதிரான அலையையே மக்களிடம் ஏற்படித்துள்ளது .

நிலைமை இப்படி இருக்க, காங்கிரசின் 60-80 தொகுதி என்பது கேலிக்குரியதே.  திமுகவின் கூட்டணி விலகல் விளக்கம் அதைவிட கேலிக்குரியது. 60 வரை வந்தவர் 3 கூடுதலாக குடுப்பதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. எதோ இவர்கள் ஒரே அணியில் நின்றி௫ந்தால் வாக்கு பிரியாமல் ஓரளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. இப்ப அதுவும் போச்சி.  காங்கிரஸ் தனித்து நின்றால் பீகாரில் நடந்தது போல மேலும் ஒரு தோல்வியில் முடிவது நிதர்சன உண்மை. மொத்தத்தில் இந்த திமுக காகா  காங்கிரஸ் நறிய ஏமாத்திடுச்சு.

2 comments:

  1. இது என்னுடைய முதல் விமர்சனம். பிழை இருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
  2. Hey this is super da... awesome narration.. keep going...

    ReplyDelete