Pages

Friday, March 4, 2011

கவிதை என்ற பெயரில் எனது கிறுக்கல்கள்(பின்குறிப்பு- பிழை இருப்பின் மன்னிக்கவும்)

இமைக்க மறந்தன எனது  விழிகள்
வெள்ளை உடையில் தேவதையாக அவள் !!

அவள் என்னை கடந்து போகையில் மச்சான் உன்னோட ஆளு
போறாட என்று நண்பன் சொல்லுகையில்
சந்தோஷமாக தான் இருக்கு
ஆனால் அவளிடம் தான் சொல்ல முடியவில்லை அந்த 3 வாக்கியத்தை!!

எவ்வளவோ முயற்சித்து பார்த்து தோர்த்துவிட்டேன்
அவளின் பார்வைக்கும் புன்னகைக்கும் என்ன அர்த்தம் என்று
அதனால்தான் காதலித்தவர்கள் சொன்னார்களோ பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று!!

அவள் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டாள இல்லையா
என்ற குழப்பத்தில் ஆரம்பித்தது எனது இதயத்தின் காதல்
காத்திருப்பு !!

அவ்வளவு சுகமானதா  காத்திருப்பு என்று அன்றுதான்
தெரிந்து கொண்டேன் அவளுக்காக காத்திருக்கையில்!!

பேருந்து நிறுத்தத்தில்
எனது காதலுக்கும் தயக்கத்துக்கும் நடந்த போரட்ட
இடைவெளியில் கடந்து  சென்றுவிட்டால் அவள்.
மீண்டும் தொடங்கியது சண்டை எனது மனதுக்கும்
காதலுக்கும்!!

No comments:

Post a Comment